Last Updated : 29 Jun, 2018 05:27 PM

 

Published : 29 Jun 2018 05:27 PM
Last Updated : 29 Jun 2018 05:27 PM

முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் ஜூலை 15-ல் கூடுகிறது: அயோத்தி விவகாரம் தொடர்பாக ஆலோசனை

அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு ஜூலை 15-ல் கூடுகிறது. இதில் அயோத்தி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்தியாவின் சன்னி பிரிவு முஸ்லீம்களின் முக்கிய அமைப்பாக இருப்பது அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம். இதன் நிர்வாகக் குழுவில் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை இந்திய அளவில் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது. கடந்த பிப்ரவரியில் அதன் பொதுக்குழு ஹைதராபாத்தில் கூடி ஆலோசனை செய்தது.

இந்த கூட்டத்தில் அயோத்தி விவகாரம் மற்றும் முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் மீது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதை அடுத்து மீண்டும் உபியின் தலைநகரான லக்னோவில் ஜூலை 15-ம் தேதி தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு கூட உள்ளது. இதில், கலந்துகொள்ள வாரியத்தின் 40 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாகக்குழு கூட்டம் வழக்கமான ஒன்று என காலீத் ரஷீத் பிரங்கி மெஹலி கூறியுள்ளார். இதில், அயோத்தி விவகாரம் குறித்து பேசப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். எனினும், இதில், 2019 மக்களவை தேர்தல் குறித்தும் பேசப்பட இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘லக்னோ கூட்டத்தில் 2019 மக்களவை தேர்தல் குறித்தும், அதில் முஸ்லீம்களின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஜார்கண்ட் மற்றும் உபியில் பசுமாடு விவகாரத்தில் சமீபத்தில் அடித்தக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் குறித்தும் பேச உள்ளோம்.’ எனத் தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசியலில் தலையிடுவது முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் பணி இல்லை. எனினும், அந்த அமைப்பு பாஜகவிற்கு எதிரான கொள்கை முடிவுகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கு மறைமுக ஆதரவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x