Published : 29 Jun 2018 08:38 AM
Last Updated : 29 Jun 2018 08:38 AM
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை நேற்று முன்தினம் தொடங்கியது. பனி லிங்கத்தை காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா நேற்று தரிசித்தார். பின்னர், செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், ‘‘அமர்நாத் யாத்திரையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள் கவலைப்பட வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, மழை காரண மாக நிலச்சரிவு ஏற்பட்டதால் 2-வது நாளான நேற்று யாத்திரை புறப்படுவது தாமதமானது. சாலைகள் சரி செய்யப்பட்டதும் யாத்திரை தொடங்கியது. பஹல்காம் முகாமில் இருந்து 2,638 பேரும் பல்டால் முகாமில் இருந்து 796 பேரும் கொண்ட 2-வது குழுவினர் நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT