Published : 25 Jun 2018 08:05 AM
Last Updated : 25 Jun 2018 08:05 AM

கிருஷ்ணா நதியில் அடித்து செல்லப்பட்ட 3 பொறியியல் கல்லூரி மாணவர்களின் சடலங்கள் மீட்பு

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே கஞ்சிக செர்லா பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் நேற்றுமுன் தினம் மாலை, கிருஷ்ணா மாவட்டம், இப்ரஹிம் பட்டினம் பகுதியில் உள்ள ‘பவித்ர சங்கமம்’ எனும் இடத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது, கிருஷ்ணா நதியில் முதலில் இறங்கி குளிக்க சென்ற மாணவர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற மற்ற 3 மாணவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட கரையில் இருந்த மாணவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 4 மாணவர்களை மீட்க முயன்றனர். ஆனால், இரவாகி விட்ட காரணத்தினால் மீட்பு பணிகள் தாமதமாயின. இந்நிலையில் நேற்று காலை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் கிருஷ்ண சைதன்யா, பிரவீண், ஸ்ரீநாத் ஆகியோரின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டு கரை சேர்த்தனர். ராஜ்குமார் எனும் மாணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x