Published : 25 Jun 2018 07:37 AM
Last Updated : 25 Jun 2018 07:37 AM

கேரளாவில் பள்ளிக் குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ். இவர் கடந்த புதன்கிழமை அன்று மதியம் சாப்பாட்டு நேரத்தில் நீர்க்குன்னம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி விலாஸம் என்ற அரசு பள்ளிக்கு திடீரென சென்றார். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், அவற்றின் ஊட்டச்சத்து ஆகியவை குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், திடீரென மாணவர்களோடு தானும் சாப்பிட அமர்ந்துவிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சுஹாசும் சாப்பிட்டார். இதைக் குறிப்பிட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு நன்றாக இருப்பதாகவும் தனக்கு சாதம், உருளைக்கிழங்கு பொரியல், வெள்ளரிக்காய் கூட்டு, மோர் ஆகியவை பரிமாறப்பட்டதாகவும் தனது முகநூல் பக்கத்தில் ஆட்சியர் சுஹாஸ் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த பலரும் ஆட்சியர் சுஹாசுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x