Published : 23 Jun 2018 10:39 AM
Last Updated : 23 Jun 2018 10:39 AM

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை

 கர்நாடகாவில் பாஜக நிர்வாகி முகமது அன்வர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தவர் முகமது அன்வர் (வயது 44). நேற்று இரவு அவர் கவுரி கால்வாய் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

இதில் பலத்த காயமடைந்து அவர் அங்கேயே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேரதல் நடந்தநிலையில், அரசியல் மோதல் காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அன்வர் கொலையை அடுத்து அங்கு ஏராளமான பாஜகவினர் கூடியனர் இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x