Published : 23 Jun 2018 08:00 AM
Last Updated : 23 Jun 2018 08:00 AM

ஆந்திராவில் ரயிலில் கொள்ளை

திருப்பதி - ஹைதராபாத் (காச்சிகூடா) இடையிலான வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை திருப்பதியில் இருந்து புறப்பட்டது. நள்ளிரவில் இந்த ரயில், அனந்தபூர் மாவட்டம், ஜூட்டூரு ரயில் நிலையத்திற்கு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு ஒரு கி.மீ. தொலைவில், சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, ரயிலில் இருந்த முகமூடி திருடர்கள் எஸ் 5, 6, ஆகிய பெட்டிகளில், பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி, நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்து தப்பினர்

இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்குமென பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காச்சிகூடா ரயில்வே போலீஸாரிடம் நேற்று காலை பயணிகள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x