Published : 23 Jun 2018 07:58 AM
Last Updated : 23 Jun 2018 07:58 AM
காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா விவகாரங்களுக்கான பொறுப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கார்கே, கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரா விவகாரங்களை கவனிக்க கார்கே தவிர, குஜராத்தின் சோனல் படேல், ஹரியாணாவின் ஆசிஷ் துவா, தெலங்கானாவின் சம்பத் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களாக உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT