Published : 23 Jun 2018 07:55 AM
Last Updated : 23 Jun 2018 07:55 AM

லாலு பிரசாத் ஜாமீன் நீட்டிப்பு

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். லாலு பிரசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மே மாதம் 11-ம் தேதி அவருக்கு 6 வாரம் ஜாமீன் அளித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 27-ம் தேதியுடன் ஜாமீன் முடிவடைய இருந்த நிலையில், தனக்கு உடல் நிலை பூரண குணம் அடையாததால் ஜாமீனை மேலும் நீட்டிக்க லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம் ஜூலை 3-ம் தேதி வரை அவருக்கு ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x