Published : 23 Jun 2018 07:55 AM
Last Updated : 23 Jun 2018 07:55 AM
மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். லாலு பிரசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மே மாதம் 11-ம் தேதி அவருக்கு 6 வாரம் ஜாமீன் அளித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 27-ம் தேதியுடன் ஜாமீன் முடிவடைய இருந்த நிலையில், தனக்கு உடல் நிலை பூரண குணம் அடையாததால் ஜாமீனை மேலும் நீட்டிக்க லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம் ஜூலை 3-ம் தேதி வரை அவருக்கு ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT