Published : 22 Jun 2018 07:44 AM
Last Updated : 22 Jun 2018 07:44 AM

பிரதமர் மோடியை கிண்டல் செய்ய காங்கிரஸ்காரர் தொடங்கிய பகோடா விற்பனை அமோகம்

பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி கூறுகையில், ‘‘பகோடா கடைகள் தொடங்கலாம்’’ என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ‘‘பகோடா விற்பது வேலைவாய்ப்பு என்றால் பிச்சை எடுப்பதும் வேலைவாய்ப்புதான்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார். ‘‘வேலை இல்லாமல் சும்மா இருப்பதற்கு பகோடா வியாபாரம் செய்வது மேல்’’ என்று பாஜக தலைவர் அமித் ஷா பதிலளித்தார். பெங்களூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்த இடத்தின் அருகே ‘மோடி பகோடா’, ‘அமித் ஷா பகோடா’ என்று காங்கிரஸார் கிண்டல் செய்து விற்றனர்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் நாராயண்பாய் ராஜ்புத் என்பவர் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் நிஜமாகவே பகோடா கடை ஒன்றை போட்டார். ‘‘பிரதமர் மோடியின் பேச்சை கேட்டால் படித்த இளைஞர்களுக்கு இதுதான் நிலை’’ என்று கூறி விளையாட்டாக பகோடாவை விற்பனை செய்தார். முதல் நாள் 200 ரூபாய் லாபம் கிடைத்தது. இதைப் பார்த்ததும், தொடர்ந்து கடை நடத்தினார்.

நகரின் பல இடங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்தினார். தற்போது அவரது கடையில் தினமும் 600 கிலோ பகோடா வியாபாரம் ஆகிறது. பகோடாவால் தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் கல்லா கட்டும் காங்கிரஸ் பிரமுகரான நாராயண்பாய் ராஜ்புத், இப்போது பிரதமர் மோடியை கிண்டல் செய்வதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x