Published : 22 Jun 2018 07:45 AM
Last Updated : 22 Jun 2018 07:45 AM

காஷ்மீர் பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல்

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிபுரிந்த மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (பிடிபி) அளித்து வந்த ஆதரவை பாஜக அண்மையில் வாபஸ் பெற்றது. இதையடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் தீவிரவாத செயல்களைக் கட்டுப்படுத்த தவறியதாலேயே பிடிபி கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக பாஜக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த இரண்டு நாட்களாக எனக்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தலுக்கு நான் அடிபணிய மாட்டேன். தொடர்ந்து பாகிஸ்தானின் சதிச்செயல்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன்” என்றார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில ஆளுநர் என்.என்.வோரா மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோரிடம் ரவீந்தர் ரெய்னா புகார் அளித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x