Published : 22 Jun 2018 07:45 AM
Last Updated : 22 Jun 2018 07:45 AM

ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து மத்திய பிரதேசத்தில் 15 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

ம.பி.யின் குவாலியர் மாவட்டத்திலிருந்து, மொரேனா மாவட்டம் குர்கான் என்ற கிராமத்துக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஜீப்பில் சென்றனர். நேற்று காலை 6 மணியளவில் குர்கான் கிராமத்தில் ஜீப் திரும்பும்போது, எதிரே மணல் ஏற்றி வந்த வந்த டிராக்டர் ட்ராலி, ஜீப் மோதி மோதியது. இதில் ஜீப் முற்றிலும் நொறுங்கியது.

இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மொரேனா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய டிராக்டரின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் சம்பல் தேசிய சரணாலயத்தில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x