Published : 22 Jun 2018 07:46 AM
Last Updated : 22 Jun 2018 07:46 AM
சுரிநாம் நாட்டுக்கு இந்தியா ரூ.347 கோடி நிதியுதவி வழங்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 19-ம் தேதி சுரிநாம் நாட்டுக்குச் சென்றார். அந்நாட்டு அதிபர் டிசையர் டிலானே பவுட்டர்சுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சுரிநாமின் சூரிய ஒளி மின் திட்டம் உட்பட வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா சார்பில் ரூ.347 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். கல்வி, தகவல் தொழில்நுட்பம் துறைகளில் இணைந்து செயல்பட இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. சுரிநாம் நாட்டு நாடாளுமன்றத்தில் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ‘‘இந்திய - சுரிநாம் உறவில் வளர்ச்சியும் ஒத்துழைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன’’ என்று தெரிவித்தார். வெளிநாட்டைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஒருவர் சுரிநாம் நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT