Last Updated : 10 Jun, 2018 12:02 PM

 

Published : 10 Jun 2018 12:02 PM
Last Updated : 10 Jun 2018 12:02 PM

முறியடித்த இந்திய ராணுவம்: ஜம்முவில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் கீரன் செக்டார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவத்தினர் இன்று சுட்டுக்கொன்றனர்.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கீரன் செக்டார் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் இன்று அதிகாலையில் ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாகிஸ்தான்எல்லைப்பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அவர்களை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்டனர், பதிலுக்குத் தீவிரவாதிகளும் சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சண்டையில் 5 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக்கொன்று ஊடுறுவலை முறியடித்தனர்.

புனித ரமலான் பண்டிகையையொட்டி மத்திய அரசு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திவைத்துள்ளது. இருந்தபோதிலும், இந்த சூழலைப் பயன்படுத்தி எல்லையில் ஊடுறுவ தீவிரவாதிகள் முயன்றபோது, வேறுவழியின்றி பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்தப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் எல்லையில் ஊடுறுவ முயன்ற தீவிரவாதிகள் 20 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x