Published : 10 Jun 2018 09:01 AM
Last Updated : 10 Jun 2018 09:01 AM
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 625-க்கு 624 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவர், மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பித்து 625க்கு 625 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் முதல் மாணவராக உயர்ந்துள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த மாணவர் முகமது கைஃப் முல்லா. இவர் செயிண்ட் சேவியர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவில் இவர், 625-க்கு 624 மதிப்பெண்களை எடுத்து மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தார். அவருக்கு அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்திருந்தது. இதையடுத்து பெற்றோர், ஆசிரியரிடம் ஆலோசனை செய்த முகமது தனது அறிவியல் விடைத்தாளை மறுமதிப்பீட்டல் செய்ய விண்ணப்பித்தார்.
அவரது விடைத்தாளை பரிசீலித்த கல்வித்துறை, மறுமதிப்பீட்டல் செய்யப்பட்ட மதிப்பெண்ணை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், முகமது கைஃப் முல்லா, கூடுதலாக 1 மதிப்பெண் பெற்று அறிவியலில் முழு மதிப்பெண்களையும் பெற்றார். இதன் மூலமாக, மொத்தம் 625-க்கு 625 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் மாணவராக முல்லா உயர்ந்திருக்கிறார்.
ஏற்கெனவே மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் யாஷாஸ், சுதர்ஷன் ஆகியோரின் வரிசையில் முகமது கைஃப் முல்லாவும் தற்போது இணைந்துள்ளதால் அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பியூசி கல்லூரிப் படிப்பில் இணைந்துள்ள இவர், “நன்றாக படித்து ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே எனது இலக்கு” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT