Published : 10 Jun 2018 08:59 AM
Last Updated : 10 Jun 2018 08:59 AM
டெல்லியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர், நேற்று போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “தெற்கு டெல்லியின் சாதர்பூர் பகுதியில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ராஜேஷ் பாரதி கும்பலுக்கும் டெல்லி காவல் துறையின் சிறப்பு படைக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் அந்தக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அங்கு உயிரிழந்தனர். மோதலில் 3 போலீஸாரும் காயம் அடைந்தனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT