Published : 02 Jun 2018 08:41 AM
Last Updated : 02 Jun 2018 08:41 AM

நிபா வைரஸுக்கு 16 பேர் பலி: சிகிச்சை அளித்த டாக்டர்கள் விடுப்பில் செல்ல உத்தரவு

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் வட மாவட்டங்களில் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் உள்ளது. இதற்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இவர்கள் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி மருத்துவமனையில் இந்த இருவருக்கும் சிகிச்சை அளித்த 4 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பலரை 1 வாரத்துக்கு விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் நேற்று திறக்கப்படவில்லை. இங்கு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x