Published : 02 Jun 2018 08:38 AM
Last Updated : 02 Jun 2018 08:38 AM

காஷ்மீரில் 20 தீவிரவாதிகள் ஊடுருவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து 20 தீவிரவாதிகள் இந்தியப் பகுதிகளுக்கு ஊடுருவியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் எந்த நேரமும் தீவிரவாதிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பதற்றமான இடங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதி வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவுதல் என்பது அரிய சம்பவமாகும். அவர்கள் ஒரே நேரத்தில் ஊடுருவியுள்ளது தற்போது நிகழ்ந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை, துணை ராணுவம், போலீஸாருக்கு சூழ்நிலைக்கு ஏற்ப அதிகாரிகள் உத்தரவு வழங்கி வருகின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x