Last Updated : 01 Jun, 2018 11:05 AM

 

Published : 01 Jun 2018 11:05 AM
Last Updated : 01 Jun 2018 11:05 AM

செல்போன் திருடியவருக்கு 5 ஆண்டு சிறை; ரூ.25 ஆயிரம் அபராதம் - குர்கான் நீதிமன்றம் தீர்ப்பு

குர்கான் நீதிமன்றம் செல்போன் திருடியவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அனுராக் ஹோடா கூறியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 அன்று செல்போன் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சோஹ்னாவைச் சேர்ந்த நந்த் கிஷோர் மற்றும் இவரது சிறார் சீர்திருத்தப் பள்ளி நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கிஷோர் சிறைக்கும் அவரது நண்பர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணையில் கிஷோர் குற்றம் செய்து நிரூபணமானது. இந்நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இது தவிர அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே. சோந்தி நேற்று வழங்கினார். ஜூவனைல் ஜஸ்டிஸ் போர்டு கிஷோரின் நண்பரை விசாரித்து வருகிறது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் செல்போன் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் திருட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. செல்போன் திருட்டில் ஐ.எம்.இ.ஐ எண்ணை அழிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்திருந்தது.

அவ்வகையில் கிஷோர் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தன்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x