Published : 01 Jun 2018 08:36 AM
Last Updated : 01 Jun 2018 08:36 AM
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் ஜூலை 3-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.கே.பதக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜூலை 3-ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
முன்னதாக, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், ஜூன் 5 வரை சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT