Published : 01 Jun 2018 08:32 AM
Last Updated : 01 Jun 2018 08:32 AM

மகாராஷ்டிர பாஜக அமைச்சர் பாண்டுரங் காலமானார்

மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பாண்டுரங் பண்ட்கர் (67) மாரடைப்பால் காலமானார்.

மும்பையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சோமையா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு மனைவி சுனிதா, 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் 1950-ல் பாண்டுரங் பிறந்தார். மாநில பாஜக முன்னாள் தலைவரான அவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் கேபினட் அமைச்சராக கடந்த 2016, ஜூலை 8-ம் தேதி பதவியேற்றார்.

மகாராஷ்டிராவின் அகோலா தொகுதியில் இருந்து 1989 முதல் 1996 வரை மக்களவைக்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்தகனம் சொந்த ஊரில் இன்று நடைபெறுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x