Published : 04 May 2018 12:19 PM
Last Updated : 04 May 2018 12:19 PM
பிரதமர் மோடி, தான் அணிந்திருந்த தங்க முலாம் பூசப்பட்ட மாலையை, ட்விட்டரில் தகவல் அனுப்பி கேட்ட இன்ஜினியரிங் மாணவருக்கு, அதனை அனுப்பி வைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தங்க முலாம் பூசப்பட்ட மாலை ஒன்றை அணிந்து இருந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் ரபேஷ் குமார் சி்ங் என்ற மாணவர், பிரதமர் மோடிக்கு ட்வீட்டர் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், பஞ்சாயத்து ராஜ் தினத்தில் உங்கள் உரையை கேட்டேன். மிகவும் சிறந்த பேச்சு. அந்த கூட்டத்தில் நீங்கள் அணிந்து இருந்த தங்க முலாம் பூசப்பட்ட மாலை மிக அழகாக இருந்தது. அதுபோன்ற ஒரு மாலை எனக்கு கிடைக்குமா? என கேட்டு இருந்தார்.
இதையடுத்து மறுநாள் அதே மாலையுடன், கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடி அந்த மாணவருக்கு அனுப்பி வைத்தார். அதில், ‘‘உங்கள் ட்வீட்டர் தகவலை படித்தேன். இதனுடன் சேர்ந்து அந்த தங்க முலாம் பூசப்பட்ட மாலையையும் அனுப்பி வைத்துள்ளேன். உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT