Published : 04 May 2018 07:34 AM
Last Updated : 04 May 2018 07:34 AM

ஆர்எஸ்எஸ் அவமதிப்பு வழக்கு: ஜூன் 12-ம் தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு உத்தரவு

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி மாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த பிவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல், ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் மகாத்மா காந்தியைக் கொன்றனர் என குற்றம் சாட்டினார். இந்தக் கருத்து ஆர்எஸ்எஸ் அமைப்பை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஷ் குந்தே, பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாராயண் அய்யர் வாதாடும்போது, “இந்த வழக்கில் சுருக்கமான விசாரணைக்கு (பிரமாண பத்திரம் தாக்கல்) பதில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். வரலாற்று உண்மை தொடர்பான இந்த விவகாரத்தில் சில ஆதாரங்களைப் பதிவு செய்ய விரும்புகிறோம். இதற்கு அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ராகுல் ஆஜராக வேண்டும். அப்போது இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். - பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x