Published : 30 Apr 2018 06:04 PM
Last Updated : 30 Apr 2018 06:04 PM

சிறுமியின் ஆடையை களைந்து அசிங்கம் செய்து அட்டூழியம்: பிஹாரில் 4 இளைஞர்கள் கைது

 பிஹார் மாநிலம் ஜகானாபாத்தில் பொது இடத்தில் இளைஞர்கள் சிலர், சிறுமி ஒருவரின் ஆடையை களைந்து அசிங்கப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர், உத்தரப் பிரதேசம், குஜராத் என அடுத்தடுத்து பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்து நாட்டையே உலுக்கி வருகின்றன. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் சிறுமி ஒருவரை பொது இடத்தில் ஆடையை களைந்து அவமானம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம் ஜகானாபாத் மாவட்டத்தில் சிறுமி ஒருவரை 8 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொது இடத்தில் அசிங்கப்படுத்தியுள்ளனர். அவரது ஆடைகளை களைந்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அந்த சிறுமி ‘‘அண்ணா விட்டு விடுங்கள்’’ என கதறி அழுதும் அதை கேட்காமல் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து சிறுமியை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இந்த காட்சியை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த சிறுவர்கள் அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து அம்மாநில காவல்துறை கண்காணிப்பாளர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அவர்களில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மைனர் என தெரிய வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x