Published : 30 Apr 2018 09:01 AM
Last Updated : 30 Apr 2018 09:01 AM
கடந்த 2011-12 முதல் 2016-17 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதியின் முழு விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி, சென்னை ஐஐடி, டெல்லி ஐஐடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், இன்போசிஸ் பவுண்டேஷன், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம் உட்பட 3,292 நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதி விவரங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 15 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிதி விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT