Published : 30 Apr 2018 08:59 AM
Last Updated : 30 Apr 2018 08:59 AM

காங்கிரசுக்கு அமித் ஷா கடும் கண்டனம்

காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில்,‘‘காங்கிரஸின் பரம்பரை ஆட்சியை மக்கள் ஒவ்வொரு மாநிலமாக தேர்தலில் தோற்கடிக்கின்றனர். ஆனால், இதைப் பற்றி கண்டு கொள்ளாமல் மத்திய அரசுக்கு எதிராக ‘ஜன் ஆக்ரோஷ்’ (மக்களின் கோபம்) என்ற பெயரில் காங்கிரஸ் கூட்டம் நடத்துகிறது. மக்களின் கோபத்தை பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பினால்,

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசை மக்கள் எப்படி தோற்கடித்தார்கள் என்பதை பார்க்கட்டும். பதவிப் பசிக்காக அரசியல் சாசன அமைப்புகளை நசுக்கும் காங்கிரசின் முயற்சிக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும். காங்கிரசின் பொய்களை மக்கள் பொறுக்க மாட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x