Published : 30 Apr 2018 07:57 AM
Last Updated : 30 Apr 2018 07:57 AM

கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக சுதாகர ரெட்டி மீண்டும் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக எஸ்.சுதாகர ரெட்டி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்தது. இதில் நேற்று கட்சியின் பொதுச் செயலாளராக எஸ். சுதாகர ரெட்டி (76) மூன்றாவது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யபட்டார்.

கட்சியின் தேசிய கவுன்சிலுக்கு 125 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரும் தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x