Published : 09 Apr 2018 02:28 PM
Last Updated : 09 Apr 2018 02:28 PM
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டம் டம் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதுகுறித்து கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது:
இந்த வெடிகுண்டு ரயில்வே நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் வெடித்தரது. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் ரயில்வே ஊழியரோ பயணியோ அல்ல.
அருகிலுள்ள குடிசை ஒன்றில் சில வெடிகுண்டுகள் இருந்ததை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT