Published : 09 Apr 2018 11:13 AM
Last Updated : 09 Apr 2018 11:13 AM
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஒரு வார சிறைவாசத்திற்குப் பின் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
ஷோபியன் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து இவர் கைது செய்யப்பட்டு கடந்த திங்கள் அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த வாரம் ஞாயிறு (2 ஏப்ரல்,2018) அன்று ஷோபியன் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஞாயிறு அன்று 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் 13 தீவிரவாதிகள், மூன்று பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற நாவல்வரும் பொதுமக்கள்.
இந்நிலையில் இவர் நேற்று ஸ்ரீநகர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்திற்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக போராட்டம் நடத்தியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தன் தாயிடம் கூட சிறிதுநேரம் பேசமுடியாத துயரத்தைக் குறிப்பிட்டு காஷ்மீரி சிறைக்கைதிகளின் மோசமான நிலைமைகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியதும் அதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT