Published : 09 Apr 2018 08:22 AM
Last Updated : 09 Apr 2018 08:22 AM

15 கி.மீ. தூரம் பின்னோக்கி சென்ற ரயில்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒடிசா மாநிலம் பூரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. ஒடிசா மாநிலத்தில் டிட்லகர் என்ற இடத்தில் ரயில் நின்றது. அங்கு ரயில் இன்ஜினை மாற்றும்போது, எதிர்பாராவிதமாக இன்ஜின் இல்லாமல் ரயில் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. இதனால், ரயில்வே ஊழியர்களும் அதிகாரிகளும் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தண்டவாளத்தில் தடுப்புக்கட்டைகள் அமைத்து ரயிலை நிறுத்தினர். சுமார் 15 கி.மீ.தூரம் இன்ஜின் இல்லாமல் ரயில் பின்னோக்கிச் சென்றது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். இதுதொடர்பாக இன்ஜின் டிரைவர்கள் 2 பேர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x