Published : 09 Apr 2018 08:14 AM
Last Updated : 09 Apr 2018 08:14 AM
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லிவாழ் தமிழ் இளைஞர்கள் அமைப்பினர் (டிடிஒய்எப்), ராஜிவ் சவுக் ரயில் நிலையத்திலிருந்து நாடாளுமன்ற சாலை வரை நேற்று பேரணியாக சென்றனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று டிடிஒய்எப் குற்றம்சாட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT