Last Updated : 06 Apr, 2018 02:52 PM

 

Published : 06 Apr 2018 02:52 PM
Last Updated : 06 Apr 2018 02:52 PM

ஒடிசாவில் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்ற பெண்ணை வழிமறித்து இழிவாகப் பேசிய இளைஞர் கைது

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியிடம் இழிவான வார்த்தைகளைப் பேசியதற்காக இன்று (வியாழன்) கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காகியா காவல் நிலையப் பொறுப்பு ஆய்வாளர் அஷின் குமார் சாஹூ கூறியதாவது:

''திஹாரன்ஷ் கிராமத்திலிருந்து காகியா-ஜெனாபூர் சாலை வழியாக மாணவி ஒருவர் சைக்கிளில் கல்லூரிக்கு போய்க்கொண்டிருந்தார். இம்மாணவி பயிலும் கல்லூரி அருகிலுள்ள தர்மசலா நகரத்தில்தான் அமைந்துள்ளது.

திஹங்குரான்ஷிலிருந்து காகியா பகுதியைக் கடந்துசெல்லும்போது அவர் காதில் விழும்படியாக பல்ராம் (26) எனும் இளைஞர் இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் பேசிய இழிவான வார்த்தைகளைக் கேட்டு மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் தொடர்ந்து வகுப்பறையில் அமர்ந்து பாடங்களைக் கேட்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாணவி நண்பகலிலேயே வீடு திரும்பிவிட்டார்.

வீடு திரும்பியதும் தான் கல்லூரிக்குச் செல்லும்வழியில் நடந்த சம்பவத்தைக் கூறி தான் தொடர்ந்து வகுப்பில் அமரமுடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறி தந்தையிடம் அழுதுள்ளார்.

திஹாகுரான்ஷ் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அந்த இளைஞர் இன்று (வியாழன்) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது'' என்றார் காகியா காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x