Published : 06 Apr 2018 08:31 AM
Last Updated : 06 Apr 2018 08:31 AM

வெறுப்புணர்வை தூண்டும் ராகுல்: அமித் ஷா புகார்

பாஜக தலைவர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தலித், பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றும் ராகுல் கூறுகிறார். பொய்களை மட்டுமே ராகுல் பேசுகிறார். சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக, எஸ்சி, எஸ்டி சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக பொய் தகவலை ராகுல் கூறுவதை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதாரமாக கர்நாடகாவில் ராகுலின் தேர்தல் பிரச்சார உரையின் வீடியோவை அமித் ஷா இணைத்துள்ளார். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில விதிமுறைகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x