Published : 06 Apr 2018 08:13 AM
Last Updated : 06 Apr 2018 08:13 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்புகள் சார்பாக நேற்று எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு, ஷிமோகா, கோலார் தங்கவயல் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டன. இதனால் கர்நாடகாவில் இருந்து சென்னை, சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நகரங்களுக்கு செல்லும் 700 கர்நாடக அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் மைசூரு - கோவை, பெங்களூரு - சென்னை, பெங்களூரு -சேலம், கோலார் தங்கவயல் - வேலூர் உள்ளிட்ட வழித்தட சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே பெங்களூருவில் இருந்து கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT