Last Updated : 20 Mar, 2018 07:40 PM

 

Published : 20 Mar 2018 07:40 PM
Last Updated : 20 Mar 2018 07:40 PM

பர்தா அணியாத முஸ்லிம் மாணவிகள் குறித்து பேராசிரியர் ஆபாச பேச்சு: கேரளாவில் வலுக்கும் போராட்டம்

 

கேரள மாநிலம், கோழிக்கோடு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியாததைக் கண்டித்து பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பேராசிரியரைக் கண்டித்து மாணவிகள் தொடர்ந்து 2 நாளாகபோராட்டம் நடத்தி வருகின்றனர், சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பான கண்டனங்கள் வலுத்து வருகிறது.

கோழிக்கோடு நகரில் பரூக் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக டி.ஜோகர் முன்னாவிர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியாமல் வந்துள்ளனர்.

இதைக் கண்ட பேராசிரியர் முன்னாவிர், முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாவிட்டால்கூட, தலைப் பகுதியைக்கூட ஷால் கொண்டு மூடிக்கொண்டு வந்திருக்கலாம் என்று கூறிய அவர், பெண்களின் மார்புப்பகுதியை தர்பூசணிப்பழத்தோடு ஒப்பிட்டுமிகவும் ஆபாசமாக விமர்சித்துள்ளார்.

பேராசிரியர் முன்னாவிர் விமர்சித்த ஒலிநாடாவையும் மாணவிகள் பதிவு செய்துவைத்து அதை சமூக ஊடகங்களில் பரப்பினர். மாணவிகளை தரக்குறைவாக விமர்சித்ததைக் கண்டித்து, நேற்றுமுதல் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாவிர் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் இன்று கையில் தர்பூசணிப்பழங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையில் ஊர்வலமாக வந்தனர். கல்லூரி வாசலின முன் தர்பூசணிப் பழத்தை உடைத்து அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை எந்த பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே கடந்தவாரம் கல்லூரியில் நடந்த ஹோலி பண்டிகையின் போது, மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் ஒருபகுதியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x