Published : 20 Mar 2018 04:05 PM
Last Updated : 20 Mar 2018 04:05 PM
ஒலிபிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நடத்தி வரும் அரசு சாரா தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதி பெற்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
‘‘ஒலிம்பிக்க வீரங்கனையும், மாநிலங்களவை எம்.பியுமான மேரி கோம் நடத்தி வரும் தொண்டு நிறுவனம், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளுக்கு எதிராக நிதி பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் 20 தொண்டு நிறுவனங்கள் மீது இதே போன்ற புகார் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற இந்த தொண்டு நிறுவனங்கள் அதை முறைகேடாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய பொது சுகாதார பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் மீது புகாரையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளையும் உள்துறை அமைச்சகம் தணிக்கை செய்து வருகிறது.
இதுபோலவே 13 கோடி ஆதார் எண்களை முறைகேடாக வெளியிட்ட புகாருக்கு ஆளான பெங்களூருவை சேர்ந்த ‘சென்டர் பார் இண்டர்நெட் சொசைட்டி’ என்ற ஆராய்ச்சி மையம் குறித்தும் உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT