Published : 20 Mar 2018 02:31 PM
Last Updated : 20 Mar 2018 02:31 PM

15 நாள் பரோல்: கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்டார் சசிகலா

 

கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகாலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் வெளியே வந்த சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில்,  கடந்த பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து நடராஜனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சசிகலா சார்பில் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரோலுக்கு விண்ணப்பித்தனர்.

இதையடுத்து, சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. பரோல் கிடைத்ததையடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து பிற்பகல் வெளியே வந்தார். சசிகலாவைப் பார்ப்பதற்காக, அவரது ஆதரவாளர்கள் சிறை வளாகம் அருகே கூடியிருந்தனர்.

பெங்களூருவில் இருந்து சாலை வழியாக சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டுள்ளார். இன்று மாலை தஞ்சாவூர் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x