Published : 20 Mar 2018 02:34 PM
Last Updated : 20 Mar 2018 02:34 PM
தங்கள் சித்தாந்தங்களுக்கு எதிரானவர்களின் சிலைகளை உடைக்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தங்கள் கட்சியினருக்கு கோடிட்டு ஊக்குவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விடுதி கிராமத்தில் உள்ள பெரியாரின் சிலை திங்கள்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பெரியாரின் சிலை உடைப்பு சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "திரிபுராவில் லெனின் சிலையை உடைக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தங்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்தினர். இப்போது, தலித்துகளின் நன்மைக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி பெரியார்போன்று, தங்கள் சித்தாந்தங்களுக்கு எதிரானவர்களின் சிலைகளை உடைக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ். தங்கள் தொண்டர்களுக்கு கோடிட்டுக் காட்டுகிறது'' என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT