Published : 20 Mar 2018 08:46 AM
Last Updated : 20 Mar 2018 08:46 AM

காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணி அமைக்க தீவிர முயற்சி: மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

தேசிய அளவில் 3-வது அணியை அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாதாவில் 3-வது அணியை அமைப்பதில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளை இதற்காக அவர் ஒருங்கிணைத்து வருகிறார்.

திமுக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய அளவில் தரமான அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசுவதற்காக டிஆர்எஸ் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ் நேற்று கொல்கத்தாவுக்கு வந்தார். கொல்கத்தாவிலுள்ள நபண்ணா அரசு அலுவலகத்துக்கு வந்த சந்திரசேகர் ராவை, முதல்வர் மம்தா பானர்ஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

முன்னதாக கடந்த 4-ம் தேதி தொலைபேசியில் அழைத்து சந்திரசேகர ராவுடன், மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாகவே ராவ், தற்போது கொல்கத்தா வந்துள்ளார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினர். தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும்போது அதில் சேரவுள்ள கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x