Published : 20 Mar 2018 08:33 AM
Last Updated : 20 Mar 2018 08:33 AM

‘தமிழக அரசியலில் ரஜினிக்கு வெற்றி முகம்’: ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அர்ச்சகர் வாக்கு

தெலுங்கு வருடப் பிறப்பான விளம்பி நாம வருட பஞ்சாங்கம் நேற்று அனைத்து முக்கிய கோயில்களிலும் வேத பண்டிதர்களால் படிக்கப்பட்டது. இதில் வாயுத்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரதான குருக்கள் ராமலிங்கேஸ்வர குருக்கள், விளம்பி பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன் படித்து அதன் பலன்களை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:

2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார். ஆனால், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா, பிஹார் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறையும். ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறாது. தெலங்கானாவில் மீண்டும் கே.சந்திரசேகர ராவே முதல்வர் ஆவார். தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்துக்கு வெற்றி முகம் உண்டாகும்.

இவ்வாறு விளம்பி நாம ஆண்டின் பஞ்சாங்க வாக்கினை ராமலிங்கேஸ்வர குருக்கள் வாசித்தார். இதனை கேட்ட பலர் ஆச்சரியத்துக்குள்ளாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x