Last Updated : 03 Mar, 2018 01:49 PM

 

Published : 03 Mar 2018 01:49 PM
Last Updated : 03 Mar 2018 01:49 PM

48 மணிநேரத்தில் 4 பாக். வீரர்கள் கொல்லப்பட்டனர்; பூஞ்ச் பகுதியில் பொதுமக்கள் வெளியேற உத்தரவு

ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடந்த சண்டையில் கடந்த 48 மணிநேரத்தில் 4 பாக்.வீரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவத்தினர், 2 பொதுமக்கள் உள்ளிட்ட நிறைய இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை பூஞ்ச் மற்றும் ராஜோவ்ரி மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் (எல்ஓசி) பகுதியில் பதில் தாக்குதலில் ஈடுபட்டபோது 48 மணி நேரத்தில் நான்கு பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம் 120 மி.மீ. மற்றும் 82 மி.மீ. நீளமுள்ள சிறு பீரங்கிகளைப் பயன்படுத்தி இந்திய ராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் குடியிருப்புகளை நோக்கியும் சுட்டனர். மேலும் குண்டுகள் வீசுவதிலும் சுடுவதிலும் ஈடுபட்டனர். அதில் 2 பாதுகாப்புப் படையினரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்தனர்.

குறைந்தபட்சம் அரை டஜன் பொதுமக்களின் வீடுகளும் ஷெல் தாக்குதலில் முற்றிலும் அல்லது பகுதி சேதமடைந்துள்ளன. பூஞ்ச் மற்றும் ராஜோவ்ரி ஆகிய இடங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மார்ச் 5 வரை மூடுவதற்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எப்பொழுது வேண்டுமானாலும் தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x