Published : 03 Mar 2018 01:04 PM
Last Updated : 03 Mar 2018 01:04 PM

மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் தயாரா?- மோடிக்கு ஒவைசி சவால்

 மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் தயாரா? என பிரதமர் மோடிக்கு, இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மத்தியில் பாஜக பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். அதிருப்தியை தவிர இந்த ஆட்சி மக்களுக்கு எதையும் தரவில்லை. தேர்தல் வந்தால் பாஜகவிற்கு தகுந்த பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.

ஆனால், பாஜகவினர் தங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் மக்களவையைக் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தத் தயாரா? பாஜகவிற்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா? என்பது அப்போது தெரியும்.

எப்படியாகினும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்திய தீர வேண்டும். அந்த சமயத்தில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்'' என ஒவைசி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x