Published : 03 Mar 2018 10:54 AM
Last Updated : 03 Mar 2018 10:54 AM
நாகாலாந்து மாநிலத்தில் நாகாலாந்து மக்கள் முன்னணி முன்னிலை வகித்து வருகிறது.
நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நாகாலாந்து மக்கள் முன்னணி 32 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த கூட்டணியை எதிர்த்து களம் கண்ட நாகாலாந்து ஜனநாயக முன்னேற்ற கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
நாகாலாந்து ஜனநாயக முன்னேற்ற கட்சி தலைவர் நியூபியு ரியோ ஏற்கெனவே போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்தில் ஆட்சியில் உள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியுடனான கூட்டணியை தேர்தலுக்கு முன், பாஜக முறித்துக் கொண்டது. புதிய கட்சியான நாகாலாந்து ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டது.
நாகாலாந்தில் இரு மாநில கட்சிகள் இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT