Published : 13 Feb 2018 01:26 PM
Last Updated : 13 Feb 2018 01:26 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகா சிவாராத்திரியை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒவ்வொரு முறை பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னரும் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பிரச்சாரம் செய்வதை ராகுல் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதேபோல், தற்போது கர்நாடகா தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தைத் துவக்கியுள்ள அவர், அங்கும் கோயிலுக்கு சென்றுவிட்டே பிரச்சாரத்துக்கு போனார்.
மதச்சார்பற்ற அரசியலை முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் இந்த கோயில் பயணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று அவர் மகா சிவராத்திரிக்கு சிவன் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT