Published : 13 Feb 2018 01:03 PM
Last Updated : 13 Feb 2018 01:03 PM
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் தீப்பற்றியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான 'சாகர் பூஷண்' கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடல் பகுதியில் தோண்டும் பணிகளை மேற்கொண்டு இருந்த இந்த கப்பலில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதையடுத்து துறைமுகp பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இன்று காலை பழுதை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளே இருந்த குழாய் வெடித்துச் சிதறியது. இதனால் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல ஊழியர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணியும், தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது. துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT