Published : 13 Feb 2018 12:01 PM
Last Updated : 13 Feb 2018 12:01 PM

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி படுகொலை: மார்க்சிஸ்ட் மீது புகார்

 

கேரள மாநிலம் கண்ணூரில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் அவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் அரசியல் ரீதியான படுகொலைகள் அதிகம் நடந்து வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதிக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இடதுசாரி கூட்டணி அரசு பதவியேற்றபின் அரசியல் படுகொலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலம் தலைச்சேரி அருகேயுள்ள மட்டனூரில் அப்பகுதி வட்டார இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுகாபிப் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலில் அவரது நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர். இந்தப் படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களே படுகொலை செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இளைஞர் காங்கிரஸ் செயலாளர் படுகொலையைக் கண்டித்து அப்பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x