Published : 13 Feb 2018 09:49 AM
Last Updated : 13 Feb 2018 09:49 AM

சாலைகளை சுத்தம் செய்து கின்னஸ் சாதனை

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நேற்று ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பாக்லிங்கம் பள்ளி எனும் இடத்தில் ஒரே சமயத்தில் 15,320 பேர் பங்கேற்று சாலைகளைச் சுத்தம் செய்தனர். இதில் தெலங்கானா மாநில துணை முதல்வர் முகமது அலி, அமைச்சர்கள் மற்றும் 26 பள்ளிகளைச் சேர்ந்த 8,500 மாணவ, மாணவிகள், 6 கல்லூரிகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள், 600 ஆசிரியர்கள், 800 மாநகராட்சி ஊழியர்கள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 3 நிமிடங்களில் ஆஜாமாபாத்திலிருந்து சுந்தரய்யா பூங்கா வரை சுத்தம் செய்தனர்.

இது ஒரு கின்னஸ் சாதனையாகும். இதற்குமுன் கடந்த ஆண்டு குஜராத் மாநிலம், வடோதராவில் 5,058 மாணவ, மாணவிகள் 2 நிமிடம் பங்கேற்று சாலைகளைச் சுத்தம் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x