Published : 11 Feb 2018 08:50 AM
Last Updated : 11 Feb 2018 08:50 AM

2ஜி மேல்முறையீடு வழக்கறிஞராக துஷார் நியமனம்

அலைக்கற்றை வழக்கில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சிபிஐ கூறியிருந்தது. மத்திய அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில், “2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேல் முறையீடு செய்வது, அரசு தரப்பில் வாதங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்க, மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x