Published : 11 Feb 2018 08:48 AM
Last Updated : 11 Feb 2018 08:48 AM

காஷ்மீர் சட்டப்பேரவையில் பரூக் கட்சி எம்எல்ஏ லோனே பாகிஸ்தான் ஆதரவு கோஷம்

காஷ்மீர் சட்டப்பேரவை நேற்று காலை கூடியது. அப்போது, சுஞ்ச்வான் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சட்டப்பேரவைத் தலைவர் கவிந்தர் குப்தா கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சுஞ்ச்வான் பகுதியில் ஏராளமான ரோஹிங்யா முஸ்லிம்கள் இருக்கின்றனர். இதுவே இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கிறது. ரோஹிங்யா அதிகமுள்ள இடங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இந்தத் தாக்குதலை அவர்கள் கூட நடத்தியிருக்கலாம். எனவே, காஷ்மீரில் ரோஹிங்யா மக்கள் வசிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில், பாஜக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்தனர். அவர்கள் அனைவரும், பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ முகமது அக்பர் லோனே தாம் அமர்ந்திருந்த இருக்கையின் மீது எழுந்து நின்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார். மேலும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பரூக் அப்துல்லா கண்டனம்: இந்நிலையில், எம்எல்ஏ முகமது அக்பர் லோனேவுக்கு அவர் சார்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x