Last Updated : 05 Feb, 2018 06:40 PM

 

Published : 05 Feb 2018 06:40 PM
Last Updated : 05 Feb 2018 06:40 PM

அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் வருமான வரியை தாங்களே செலுத்துங்கள்: பஞ்சாப் முதல்வர் அறிவுறுத்தல்

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்கள் வருமானவரியை இனி தாங்களே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் அமரிந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து எம்எல்ஏ, அமைச்சர்களுக்கும் மாநில அரசு வருமான வரி செலுத்தி வருகிறது. ஆனால், மாநில அரசு மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், வேறுவழியின்றி இந்த நடவடிக்கையை முதல்வர் அமரிந்தர் சிங் எடுக்க உள்ளார்.

இது குறித்து சண்டிகரில் முதல்வர் அமரிந்தர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் இப்போது அவர்களின் வருமான வரியை அரசுதான் செலுத்தி வருகிறது. நாட்டில் பஞ்சாப் மாநிலம் மட்டுமே எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் வருமானவரியை செலுத்தி வருகிறது.

ஆண்டுக்கு ரூ.11.08 கோடி வருமான வரி செலுத்துகிறோம். ஆனால், இனிமேல் அவர்களே தங்களின் வருமான வரியை செலுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

அவர்களின் வருமான வரியை செலுத்துவதால், அரசுக்கு அதிகமான நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது, ஆனால், இப்போதுள்ள நிலையில், அரசுக்கு பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த வரியை அரசு தவிர்த்தால், அரசுக்கு ரூ.10-.72 கோடி சேமிக்கப்படும்.

இந்த பணம் சேமிக்கப்படும் போது, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அரசு திருப்ப முடியும், நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.

அதேபோல, மாநிலத்தில் உள்ள வசதி படைத்த விவசாயிகள், கட்சித் தலைவர்கள் இலவச மின்சாரத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x