Last Updated : 05 Feb, 2018 03:00 PM

 

Published : 05 Feb 2018 03:00 PM
Last Updated : 05 Feb 2018 03:00 PM

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பட்ஜெட் காரணமல்ல: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் இதற்குக் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது:

''பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பட்ஜெட்டோ நீண்டகால மூலதன ஆதாயங்களின் மீதான வரி சீரமைப்போ காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் இதற்குக் காரணம்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குகளின் கூர்மையான வீழ்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியலின் சராசரி இழப்பு 665.75 புள்ளிகள் அல்லது 2.54 சதவீதம் இருந்திருக்கிறது. முடியும் தருவாயில் 25,520.96 என சரிந்துள்ளது'' என்றார்.

பிப்ரவரி 1 அன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது வர்த்தகத்தின் தொடக்கம் உயர்ந்து இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தில் 36,256 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சென்றது.

அன்றைய பட்ஜெட் அறிவிப்பில், நீண்டகால மூலதன ஆதாய வரி குறித்து கூறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் 35,501 புள்ளிகளாகச் சரிந்தது. வியாழனுக்கு முதல்நாள் வர்த்தகத்தின் முடிவில் 58 புள்ளிகள் சரிந்து 35,906 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்தது.

பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பங்குச்சந்தை இன்று (திங்கள்கிழமை) வரை இன்னும் சீரடையாத நிலையே தொடர்கிறது.

பிஸ்இயின் சென்செக்ஸ் அளவீட்டு விகிதம் எவ்வாறாயினும், இன்றும் பங்குச்சந்தையின் சரிவு தொடர்ந்து இருந்தது, 34,520க்கு 550 புள்ளிகள் மீட்டெடுக்கப்பட்டது. இன்று காலை 11.15 மணிக்கு 34,737 அளவில் அதன் வர்த்தகம் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x